மாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதித்து ஆன்மீக புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ள நிலையில் அவர் செய்த ஆன்மீக புரட்சி இன்று வரை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.
இவர் ஆன்மீக குருவாக போற்றப்படுகிறார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். அவர் பக்தர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். அவர் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றே பக்தர்களால் நம்பப்படுகிறது.

மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்திய அரசு அவருக்கு 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கியது. இவருக்கு மனைவி லட்சுமி அம்மாள், மகன்கள் ஜி.பி.செந்தில் குமார், ஜி.பி. அன்பழகன் ஆகியோர் உள்ளனர். இரு மகள்களும் உள்ளனர்.
பங்காரு அடிகளார் அரசியல் கட்சித் தலைவர்களால் மிகவும் போற்றப்பட்டவர். இவர் ஆசிரியராக இருந்து பின்னர் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலை தொடங்கினார். மேலும் அவர் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.
இதனால் அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. அவர் ஆன்மீக புரட்சி செய்துள்ளார். கோயில் கருவறைக்குள் ஆண்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் பெண்களும் செல்லலாம் என அந்த புரட்சியை செயல்படுத்தினார்.
இன்று வரை ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டுக் கொண்டு செல்லும் செவ்வாடை பக்தர்கள் கோயில் கருவறையில் உள்ள சுயம்புக்கு அபிஷேகம் செய்து வெளியே வரலாம். இது மட்டுமல்ல, மாதவிடாய் என்பது சிறுநீர், மலத்தை போன்று ஒரு கழிவுதான் என்றும் அது பாவம் இல்லை என்றும் அவர் கூறி மாதவிடாய் காலத்திலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications