சூப்பராக வேலை செய்யும் ஆதித்யா எல்-1 சென்சார்கள்! சூரிய புயலை கச்சிதமாக படமெடுத்து அசத்தல்
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரியனிலிருந்து வெளிவந்த சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்திருக்கிறது.
இந்திய விண்வெளி துறையில் சந்திரயான் 3க்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன், ஆதித்யா எல்1 தான். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. ஆதித்யா எல்1 தான் முதல் விண்கலம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய கருவிள் சூரிய புயல்களை தெளிவாக படம்பிடித்திருக்கிறது. கடந்த மே மாதம் 10-11 தேதிகளில் சூரியனிலிருந்து சூரிய புயல் வெளிவந்தது. இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை சர்வதேச நாடுகளை சேர்ந்த விண்கலன்கள் படம் பிடித்தன. ஆனால் ஆதித்யா எல்-1-ஆல் படம் எடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 14ம் ஆதித்யா எல்-1-ன் SUIT மற்றும் VELC கருவிகள் சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் தெளிவாக படம்பிடித்தது. இதில் சூரியனின் காந்த பகுதிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. அதேபோல சூரிய புள்ளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதித்யா தெளிவாக படம் பிடித்திருக்கிறது.
இதற்கு முன்னரும் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல சூரிய புயல்கள் வெளியாகியிருந்தன. அப்போதும் பாபா(PAPA) எனும் கருவி அதை தெளிவாக படம்பிடித்திருந்தது.
பாபா ஒரே கருவியாக இருந்தாலும், இதில் இரண்டு சென்சார்கள் இருக்கின்றன. இந்த சென்சார்கள் சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அது எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.
சரி ஏன் இந்த அளவீடுகள் முக்கியம் என்கிற கேள்வி எழலாம். அதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். அதாவது, சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்ப்யூட்டர் என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரானிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக பேரழிவு ஏற்படும்.
எனவே இந்த பேரழிவை முன்கூட்டியே கண்காணிக்க கரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் சூரிய புயல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த பணியைதான் இந்தியாவின் ஆதித்யா எல்1 வெகு சிறப்பாக செய்து வருகிறது என்று இஸ்ரோ தற்போது உறுதி செய்துள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications