அசத்தும் ஆதித்யா எல்-1.. முதல் புவி சுற்றுவட்டபாதையை உயர்த்திய இஸ்ரோ! இப்போ எங்கு இருக்கு தெரியுமா
சென்னை: சூரிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக இன்று உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்யும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 125வது நாள் பயணம் செய்து சூரியன் ஆய்வை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதாவது 125வது நாளில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அதன்பிறகு அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், ‛‛ஆதித்யா எல்-1 விண்கலம் பிரச்சனைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் புவி சுற்றுவட்டபாதையை பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உயர்த்தி உள்ளோம். தற்போது விண்கலத்தின் புவி சுற்றுவட்டபாதை என்பது 245 X 22459 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. விண்கலத்தின் அடுத்த புவி சுற்றவட்டப்பாதை செப்டம்பர் 5ல் உயர்த்தப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டபாதையில் 245 X 22459 கிலோமீட்டர் என்ற அளவில் வலம் வருகிறது. அதாவது பூமியில் இருந்து விண்கலம் குறைந்தபட்சம் 245 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 22,459 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications