காரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடி
சென்னை: தலைமைச்செயலகத்திற்குள் காரணமின்றி இனி யாரும் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கோட்டைக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க வருவதாக கூறி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கோட்டைக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது.

புதிய நடைமுறை
தலைமைச் செயலகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது.

சந்திக்க வருகை
தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளை சந்திக்கவும், கோட்டைக்கு வரும் அமைச்சர்களை சந்திக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த புதிய நடைமுறையால் பார்வையாளர்கள் நினைத்தது போல் கோட்டை வளாகத்தில் சுற்றித்திரிய முடியாது.

தொடருமா?
புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கும் நடைமுறையால் பார்வையாளர்களை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது. இதனால் தேவையில்லாத வாக்குவாதங்களும் பார்வையாளர்கள் போலீஸார் மத்தியில் நேற்று ஏற்பட்டது. இதனால் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை தொடருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

காவல் ஆணையர் அலுவலகம்
சென்னையில் ரிசர்வ் வங்கி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு மூலம் அனுமதி அளிக்கும் நடைமுறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications