காரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடி
சென்னை: தலைமைச்செயலகத்திற்குள் காரணமின்றி இனி யாரும் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கோட்டைக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க வருவதாக கூறி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கோட்டைக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது.

புதிய நடைமுறை
தலைமைச் செயலகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது.

சந்திக்க வருகை
தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளை சந்திக்கவும், கோட்டைக்கு வரும் அமைச்சர்களை சந்திக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த புதிய நடைமுறையால் பார்வையாளர்கள் நினைத்தது போல் கோட்டை வளாகத்தில் சுற்றித்திரிய முடியாது.

தொடருமா?
புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கும் நடைமுறையால் பார்வையாளர்களை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது. இதனால் தேவையில்லாத வாக்குவாதங்களும் பார்வையாளர்கள் போலீஸார் மத்தியில் நேற்று ஏற்பட்டது. இதனால் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை தொடருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

காவல் ஆணையர் அலுவலகம்
சென்னையில் ரிசர்வ் வங்கி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு மூலம் அனுமதி அளிக்கும் நடைமுறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications