அதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் அதிவேகமான முறையில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று மாலை நேர்காணல் நடத்தப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நேர்காணலில் மொத்தம் 90 பேர் கலந்துகொண்டனர். விக்கிரவாண்டியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 36 பேரும், நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் கோரி 54 பேரும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.
நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் என்ன தொழில் செய்கிறீர்கள், எத்தனை வருடமாக கட்சியில் இருக்கிறீர்கள், மற்றும் எல்லா நேர்காணல்களிலும் கேட்கப்படும் கட்டாய கேள்வியான எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது தான் கேட்கப்பட்டது. சிலர் தன்னிடம் செலவழிக்க பணம் இல்லை கட்சி தான் பார்த்துக்கொள்ள வேண்டும், இத்தனை ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்திருக்கிறேன் என உருக்கமாகவும், சிலர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் நேர்காணலில் கூறியுள்ளனர்.
ஒரு நபருக்கு நான்கிலிருந்து 5 நிமிடம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டு மின்னல் வேகத்தில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே வேட்பாளர்களை கூட அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாகவும், நாளை(புதன்கிழமை) வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications