இன்று இல்லை.. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு நாளை விசாணை என ஐகோர்ட் அறிவிப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் நாளை பட்டியலிடப்பட உள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால், மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக மற்ற மூவரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்றும் அவற்றை சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications