இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! வைத்திலிங்கத்தை ரவுண்டு கட்டிய அதிமுக மாவட்டச் செயலாளர்!
சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை பார்த்து, இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என திருச்சி புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் ப.குமார் எகிறிய நிகழ்வு அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்துள்ளது.
மாவட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான தன்னை பார்த்து இப்படி பேசுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வைத்திலிங்கம் அப்படியே ஷாக் ஆகியிருக்கிறார்.
ப.குமார் கையில் மைக் கொடுக்கப்பட்டதற்கு வைத்திலிங்கம் எதிர்ப்பு காட்டியதே இந்த ஆவேசத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

மைக்கை கொடுங்கள்
அதிமுகவில் திருச்சி புறநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். ஒற்றைத் தலைமை தான் வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமி தான் வர வேண்டும் என நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தனது மனதில் தோன்றியதை பேசியிருக்கிறார் ப.குமார். அப்போது குறுக்கிட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மைக்கை அந்தப் பக்கம் கொடுக்குமாறு கடுகடுத்திருக்கிறார்.

தேவையில்லாத வேலை
இதனால் ப.குமாருக்கு வந்ததே கோபம், ''இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, நானும் பார்க்கிறேன் ஆரம்பத்தில் இருந்தே திருச்சி மாவட்ட அதிமுகவில் நீங்கள் மூக்கை நுழைத்து வர்றீங்க, தற்போது நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் போது கூட தேவையில்லாத வேலை செஞ்சீங்க'' என ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார். இதனால் முகம் வெளிறிப் போன வைத்திலிங்கம் கடைசி வரை வாயே திறக்காமல் ஆலோசனைக் கூட்டத்தில் அமர்ந்துவிட்டு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

நிர்வாகிகள் ஆதரவு
வைத்திலிங்கம் பா.குமாரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி, நல்லா வேணும் என்பதை போல் உள்ளூர அதை ரசித்திருக்கிறார். ப.குமாரின் இந்தப் பேச்சுக்கு அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் ஆதரவாக குரல் எழுப்பியதால் வைத்திலிங்கம் என்ன செய்வது எனத் தெரியாமல் சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக திருச்சி அதிமுகவில் வைத்திலிங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் ப.குமார் இந்தளவுக்கு டென்ஷன் ஆனாராம்.

ஒரு காலத்தில்
ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நால்வர் அணியில் இடம்பெற்றிருந்தவர் வைத்திலிங்கம். அவர் முன்னால் பேசுவதற்கே அச்சப்பட்ட பலரும் இப்போது அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத சூழல் உருவாகியுள்ளது. காரணம் பதவி இருந்த போது பவுசாக நடந்து கொண்டதே. அமைச்சராக இருந்த போது அனைவரையும் அணுசரித்து கட்சியினர் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திருந்தால் இன்று இந்தளவுக்கு நிலைமை அவருக்கு மோசமாக சென்றிருக்காது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications