Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொதுக்குழு வழக்கு.. எடப்பாடி, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி சசிகலா பதில் மனு

அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு சசிகலா தாக்கல் செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என 2017ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 மனுதாக்கல்

மனுதாக்கல்

சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும், கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறிய சசிகலா, தனது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 மனு தாக்கல்

மனு தாக்கல்

இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தினகரன் விலகியுள்ளதால் சசிகலா தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பதில் மனு தாக்கல் செய்தார். அதில், சசிகலாவின் திருத்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல எனவும் விசாரணையை காலம் தாழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சசிகலாவின் திருத்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

இந்த வழக்கில் கட்சியின் நிதி விவாகரங்கள் சம்மந்தப்பட்டுள்ளதாலும், வங்கிகளை எதிர்மனுதாராக சசிகலா இணைத்துள்ளதாலும், வங்கி தரப்பை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட உரிமையியல் நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் 6 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+