தொடரும் ரெய்டுகள்! நீளும் குழப்பம்.. டெல்லிக்கு ஓடிய அதிமுக சீனியர்?.. மேலிடம் தந்த முக்கிய அட்வைஸ்!
சென்னை: அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடந்து வரும் நிலையில் அதிர்ச்சியில் உள்ள அதிமுகவுக்கு டெல்லி மேலிடம் ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியதாக தெரிகிறது.
அதிமுக, டெல்லி மேலிடத்தின் அறிவுரைக்கேற்ப நடந்து கொள்வதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்வதுண்டு. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது, இணைக்க வேண்டாம் என கூறுவது உள்ளிட்டவற்றை அதிமுகவின் இரட்டை தலைமையை காட்டிலும் டெல்லி மேலிடமே முடிவை எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதைக்கு சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டாம் என டெல்லி மேலிடம் தெரிவித்துவிட்டதால்தான் இன்னும் அவரை அதிமுகவில் சேர்க்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சி
இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதனால் அடுத்தது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் கடந்த 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இரண்டாவது முறையாக அவரது வீட்டில் ரெய்டு நடத்தியதால் அதிமுகவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

டெல்லி சீனியர்
இதை டெல்லி மேலிடத்தில் தெரிவிக்க, டெல்லி அதிமுக சீனியர் ஒருவரை அதிமுக தலைமை அனுப்பியதாக தெரிகிறது. அங்கு அந்த நபர் டெல்லி மேலிடத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்ததாகவும் தெரிகிறது. அப்போது அவர்கள் இதெல்லாம் ஒன்றுமில்லை. தைரியமாக இருங்கள் என தட்டி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கூட்டணி
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது தவறு என்றும் மேலிடம் அறிவுறுத்தியதாம். மேலும் இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தேசிய அளவில் கூட்டணி தொடரும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டதால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

40 ஐயும் வெல்வோம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விட்டதை தற்போது பிடிப்போம். மொத்தம் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என நம்பிக்கை கூறிய டெல்லி மேலிடம், தற்போது சசிகலாவின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப அதிமுகவில் இரட்டை தலைமைக்குள் இருக்கும் புகைச்சலை வைத்தே சசிகலா கட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வருகிறார்.

சண்டை வேண்டாம்
எனவே அது போன்றதொரு சூழலை இரட்டை தலைமையினர் சசிகலாவுக்கு அமைத்து கொடுக்க வேண்டாம் என்றும் அவர்களுக்குள் விரிசல் ஏற்படாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் எங்களை முழுமையாக நம்பி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சொல்லுங்கள் என தூதுவராக வந்த சீனியரிடம் டெல்லி மேலிடம் நம்பிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications