ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்
சென்னை: அதிமுக ஒன்றும் மன்னார்குடி மாஃபியாக்கள் திறந்து வைத்திருக்கும் லாலா கடையல்ல என அக்கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனை ''திகார்கரன்'' என நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.
காளான் அல்ல காவியம் என்ற தலைப்பில் சித்ரகுப்தன் என்ற பெயரில் இந்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
தீயில் எரிய இருந்த திருக்குறள் ஓலைச்சுவடியை ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க ஒப்படைத்த'கோவை கந்தப்பன்'
கட்சியின் மனசாட்சி
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சின் மனதில் உள்ளதை பிரதிபலிக்கும் வகையில் செய்திகளும், கருத்துகள் வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் சசிகலா பற்றியும் அவரது உறவினர்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தினகரன் மீது பாய்ச்சல்
காளான் அல்ல காவியம் என்ற தலைப்பில் சித்திரகுப்தன் வெளியிட்டுள்ள கவிதையில், தினகரனை ''திகார்கரன்'' என்றும், பூத் ஏஜெண்டு கூட நியமிக்க வக்கில்லாதவர் எனவும் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உறவினர்
பாஸ்கரனுக்கு ஒரு கட்சி, சுதாகரனுக்கு ஒரு கட்சி, திவாகரனுக்கு ஒரு கட்சி, தினகரனுக்கு ஒரு கட்சி, என மாஃபியாக்கள் திறந்து வைத்திருக்கும் லாலா கடையல்ல அதிமுக எனவும் சாடியுள்ளது நமது அம்மா நாளிதழ்.
பெயிலில் காலம்
ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்களால் அதிமுகவை அழிக்க முடியாது என்றும், கழகத்தை உதிரத்தை உறிஞ்சி கொழுக்கலாம் என இனி கனவு கூட காண முடியாது எனவும் சசிகலா, தினகரன் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது.