எத்தனை தடவை சொல்றது...? 100 % வெற்றி எங்களுக்கு தான்.. சொல்லும் அமைச்சரின் வாரிசு
சென்னை:தென் சென்னை தொகுதியை அதிமுக கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளன. அதனால், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், பிரச்சாரம் பொதுக்கூட்டம் என அரசியல் களமே பரபரப்பாகி இருக்கிறது.
லோக்சபா மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அதிமுக வேட்பாளரகள் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, அவர்கள் தாக்கல் செய்தனர்.
தாத்தா, மகன்கள், பேரன்கள், மருமகள்.. அடேங்கப்பா.. இப்படி ஒரு குடும்ப அரசியலை பார்த்திருக்க முடியாது
வேட்பு மனு
தென்சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அதிமுக எம்பியுமான ஜெயவர்தன் அடையாறில் இருக்கும் தேர்தல் ஆணைய மண்டல அலுவலகத்தில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மக்கள் நலத்திட்டங்கள்
மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற அடிப்படையில் தொடர்ந்து மக்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் வழியாக பெற்று தந்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் தலைவர் முதல் தொண்டன் வரை மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அதிமுக செய்து கொண்டிருக்கிறது.
திமுக, காங். என்ன செய்தது?
அதிமுகவை பொறுத்த வரை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். 10 ஆண்டுகள் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி என்ன செய்தது? என்ன உரிமையை மீட்டெடுத்தார்கள்?
குடும்ப நலனே முக்கியம்
திமுகவுக்கு தங்களின் குடும்பநலம் ஒன்றே முக்கியம். ஆனால் அதிமுக ஒட்டுமொத்தமாக மக்கள் நலனை சார்ந்து இருக்கிறது.
வாக்குகள் சேகரிப்பு
பிரச்சாரம் தொடங்கி மக்களை சந்தித்து தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை திட்டம் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தென் சென்னை தொகுதியை அதிமுக கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி என்று அவர் தெரிவித்தார்.