5 நிமிடங்களில் காலி! பொங்கல் ரயில் டிக்கெட் புக்கிங்.. நாளையும் முக்கியமான தேதி.. நோட் பண்ணுங்க
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 12 ஆம் தேதி செல்வதற்கான புக்கிங் தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், ஜனவரி 13ம் தேதி செல்ல திட்டமிடுபவர்கள் நாளை காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

டிக்கெட் முன்பதிவு: சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று தனது உற்றார் உறவினர்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி செல்வார்கள். குடும்பத்துடன் செல்ல ரயில் பயணமே சிறந்தது என்பதால், ரயிலில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும்.
பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தான் உள்ளது.
ஜனவரி 14 பொங்கல் பண்டிகை: இதன்படி, பார்த்தால் வரும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல பிளான் செய்பவர்கள், அதாவது 12 ஆம் தேதி செல்ல வேண்டும் என்றால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு இதற்கான டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் இன்று முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் புக்கிங்க் தொடங்கிய நிலையில் வெறும் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது. 15 ஆம் தேதி புதன்கிழமை அன்று மாட்டுப் பொங்கல், 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இதனால், நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள்.
இன்று காலை 8 மணிக்கு: அந்த வகையில், ஜனவரி 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் காத்திருந்தனர். ஆனால் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 5 நிமிடத்தில் எல்லா டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு, ஜனவரி 11 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை சொந்த ஊர் செல்ல திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்யலாம். இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்கள் நாளை காலை 8 மணிக்கு இந்த வாய்ப்பை பயன்படுததி கொள்ளலாம். ஜனவரி 12 ஆம் தேதி செல்ல நினைப்பவர்கள் நாளை மறுநாள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15 ஆம் தேதி முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஐஆர்சிடிசி & டிக்கெட் கவுண்டர்கள்: ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளமான ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்யலாம். பொதுவாக பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.. அதேபோல, டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் காலியாகிவிடும். தீபாவளி பண்டிகை, ஆயுத பூஜை பண்டிகை போன்ற நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று வெயிட்டிங் லிஸ்ட் ஆக போனது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகள் காலியானது. காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐஆர்சிடிசி மற்றும் பிற இணையதளங்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிவடைந்து வெயிட்டிங் லிஸ்ட்டை காட்டியது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications