கொரோனா தடுப்பூசி போடும் முன், பின் அசைவம் சாப்பிடக் கூடாதா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
சென்னை; கொரோனா தடுப்பூசி போடும் முன்பும் பின்பும் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது உண்மை அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்ம் அளித்துள்ளார்.
Recommended Video
புதுவை துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தொடர்ந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மருத்துவர் என்ற அடிப்படையில் சமூக வலைதளங்களிலும் கொரோனா தொடர்பாக விளக்கம் அளித்தும் வருகிறார்.

இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் "தடுப்பூசி போட்டுக்கொள்வோம்... உயிர்க்கவசம் கொள்வோம்... நமது பாதுகாப்பு... நமது தேசத்தின் பாதுகாப்பு... என்ற தலைப்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனிடம் சந்தேகங்களும் கேட்கப்பட்டன.

அதில் @Sujiban7 என்பவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரும் தடுப்பூசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்கிறார்கள். அப்படி சொல்வது உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இது உண்மை அல்ல எனக் கூறியுள்ளார்.
அதேபோல் கொரோனா தடுப்பூசி போட்ட உடனேயே பணிக்கு செல்லலாமா? அல்லது ஓய்வு எடுக்கலமா? எனவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications