ரூ.3000 கோடியா? ஐடி ரெய்டால் பரபரக்கும் தமிழ்நாடு.. சார்பதிவாளர்கள் டிரான்ஸ்பர் -சென்னையே மாறிடுச்சு
சென்னை: தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் சட்டவிதிகளை மீறி பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு குற்றச்சாடுகள் எழுந்து வந்ததன. இந்த நிலையில் சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.2000 கோடி கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 17 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்றும், 400 பத்திரப்பதிவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றன.
ஆய்வை தொடர்ந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. வட சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்ட பறக்கும் இடமாக செங்குன்றம் உள்ளது. இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் அதிகளவில் பத்திரப்பதிவும் நடைபெற்று வந்தது.
சார்பதிவாளர்கள் அலுவலங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே 36 மாவட்டங்களின் சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் பலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார் அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி.
இதில் குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களுமே வெவ்வேறு இடங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளார்கள். அந்த வகையில் மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளராக வெண்மதி, ஆலந்தூர் சார் பதிவாளராக கற்பகவள்ளி, வேளச்சேரி சார்பதிவாளராக முகமது ரஃபி, தென்சென்னை நீலாங்கரை சார் பதிவாளராக சண்முகம், தாம்பரம் சார் பதிவாளராக சிவகுமார், பல்லாவரம் சார்பதிவாளராக அறிவழகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பூவிருந்தவல்லி சார்பதிவாளராக வாணி, செங்குன்றம் சார்பதிவாளராக புண்ணியமூர்த்தி, குன்றத்தூர் சார் பதிவாளராக வெங்கடேஷ், திருவொற்றியூர் சார் பதிவாளராக திருமாறன், கொன்னூர் சார் பதிவாளராக மோகன சுருதி, காஞ்சிபுரம் எண் 4 இணை சார்பதிவாளராக நெடுஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications