Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Baby boy Madhampatti Rangaraj: "ஆரம்பிக்கலாமா டாடி" 20 நாளுக்கு முன்பே அழைத்த கிரிஸில்டா குழந்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆரம்பிக்கலாமா டாடி" என அண்மையில் ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவை போட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதால் இனி மாதம்பட்டி - ஜாய் போட்ட வழக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி தன்னுடன் வாழ மறுப்பதாக சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Madhampatti Rangaraj

இதனிடையே கடந்த 16-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீஸில் ஜாய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கூட சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவச் செலவு வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ 6.50 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் எங்களுக்கு, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என அந்த இன்ஸ்டா பக்கத்தில் ஜாய் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அவரது குழந்தை பேசுவது போல் ஒரு பதிவு இருந்தது. "ஹலோ டாடி மாதம்பட்டி ரங்கராஜ், ரெடியா ஆரம்பிக்கலாமா டாடி, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு! இப்படிக்கு உங்கள் வாரிசு- மாதம்பட்டி ராஹா ரங்கராஜ் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதே நீதிமன்றம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு ஜாய் ்அலைந்தார். தற்போது குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இந்த வழக்கு என்ன மாதிரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜாய் கேட்டது போல் பராமரிப்புத் தொகையை கொடுக்க மாதம்பட்டி ரங்கராஜ் முன்வருவாரா? இல்லை இந்த வழக்கு இன்னும் நீண்டு கொண்டே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+