30 அம்ச கோரிக்கைகள்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. தொடக்க பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் ரத்து
சென்னை: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போராட்டம் நடத்த இருப்பதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் அறிவித்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் போராட்டத்தை அறிவித்து இருந்தது. நாளை முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பள்ளிகல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துச்சாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் உள்பட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில், ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வந்தது. எனினும், அதை வாய்மொழியாகவே தெரிவித்தது. கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
எனவே திட்டமிட்டபடி நாளை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், இன்று தொடக்க பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தை ரத்து செய்வதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications