இனிதான் இருக்கு 'சுட்டெரிக்கும் வெயில்' 4ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்..தப்பிக்க என்ன செய்யலாம்
சென்னை: நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும்.

ஆனால் நடப்பு ஆண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தகிக்கத் தொடங்கி விட்டது. வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் சொல்லப்போனால் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோடு, கரூரில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே... மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பாத குறைதான்.. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது.
அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெயில் உச்சத்தை தொடும். இந்த வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்பதை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தாவிட்டாலும் மே மாதத்தின் இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
எனவே, இந்த கால கட்டத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு அனல் காற்றுடன் அதிகபட்சம் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் அக்னி நட்சத்திர காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாக உள்ளது.

அதற்கு முன்பாக வேலூரில் கடந்த 2003 ஆம் ஆண்டு 113 டிகிரி வெப்பம் பதிவானது. நடப்பு ஆண்டில் வழக்கமாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் , அக்னி நட்சத்திரம் காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்கவேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
அதேபோல், அவசியம் இன்றி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெயில் காலத்தில் வெளியே போனாலும் தலையில் தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது. அதுபோக இளநீர், தர்ப்பூசணி, சர்பத் போன்ற குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும் சாப்பிட்டு உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications