இனிதான் இருக்கு 'சுட்டெரிக்கும் வெயில்' 4ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்..தப்பிக்க என்ன செய்யலாம்
சென்னை: நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும்.

ஆனால் நடப்பு ஆண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தகிக்கத் தொடங்கி விட்டது. வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் சொல்லப்போனால் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோடு, கரூரில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே... மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பாத குறைதான்.. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது.
அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெயில் உச்சத்தை தொடும். இந்த வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்பதை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தாவிட்டாலும் மே மாதத்தின் இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
எனவே, இந்த கால கட்டத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு அனல் காற்றுடன் அதிகபட்சம் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் அக்னி நட்சத்திர காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாக உள்ளது.

அதற்கு முன்பாக வேலூரில் கடந்த 2003 ஆம் ஆண்டு 113 டிகிரி வெப்பம் பதிவானது. நடப்பு ஆண்டில் வழக்கமாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் , அக்னி நட்சத்திரம் காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்கவேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
அதேபோல், அவசியம் இன்றி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெயில் காலத்தில் வெளியே போனாலும் தலையில் தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது. அதுபோக இளநீர், தர்ப்பூசணி, சர்பத் போன்ற குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும் சாப்பிட்டு உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications