Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர் அதிமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் பலத்தை நிரூபிக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் திமுகவில் இருந்து கவுன்சிலர், அதிமுகவுக்கு தாவியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

dmk aiadmk coimbatore

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை அறிவித்ததுமே, திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை 2 கட்டங்களாக 150 அதிமுக வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், ஆளும் கட்சியான திமுகவின் கவுன்சிலர் ஒருவர் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கோவை மாநகராட்சி 77 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் நேற்று இரவு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜலட்சுமி.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஏற்பாட்டில் ராஜலட்சுமி, அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளதாகச் சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதற்காக செந்தில் பாலாஜியை களமிறக்கி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆளும் கட்சி கவுன்சிலர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்திருப்பது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது என அக்கட்சியினர் கூறி வரும் சமயத்தில் நடந்துள்ள இந்த கட்சி தாவல் திமுகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வரும் ராஜலட்சுமி, கட்சி தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். "இத்தனை ஆண்டுகளாகக் களத்தில் பணியாற்றி இறுதியாக வார்டு கவுன்சிலர் ஆகியிருந்த போதிலும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு எனக்கு எந்த பூத் அளவிலான பணிகளும் ஒதுக்கப்படவில்லை" என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.

மேலும், "கட்சிக்குள் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை, பொதுப் பணிகளுக்கும் சுதந்திரம் இல்லை. கட்சிப் பிரதிநிதிகள் எங்களை மீறிச் செயல்படுகிறார்கள். கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு தனிநபருக்கும் மரியாதை அளிப்பதில் அதிமுக மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும் சில திமுக கவுன்சிலர்கள் கட்சி மாறுவது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+