பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? ஓ.பன்னீர் செல்வம் பதில்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோடநாடு சம்பவங்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த விவகாரம் நடந்து 2 வருடங்கள் ஆகின்றன. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி, தேர்தலில் ஆதாயம் பெற முயல்கிறார்கள். ஆதாரமில்லாத இந்த குற்றச்சாட்டை நாங்கள் எதிர்கொள்வோம்.

யாரிடமாவது ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம். ஊடகங்கள் வாயிலாக வதந்தி பரப்புவது, அவதூறு பரப்புவது சட்டப்படி குற்றம்.
பாஜகவை பொறுத்தளவில் அரசியல் ரீதியாக கூட்டணி மாறிக்கொண்டுள்ளது. முதலில் எங்களோடு கூட்டணி வைத்தனர், பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்தனர். பின்னர் எங்களுடன் வந்தனர். தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதா என்ற நிருபர்கள் கேள்விக்கு, எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தெரிவிப்போம் என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications