ஓவர்.. ஓவர்.. எல்லாரும் சென்னைக்கு வாங்க.. அதிமுக மா.செக்களுக்கு ஆர்டர் போட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: வரும் 22ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. பாமக அதிமுகவுடன் பேசி வந்த நிலையில் நேற்று பாஜக பக்கம் சென்றுவிட்டது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 லோக்சபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவும் காலம் தாழ்த்துவதால், கூட்டணி தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் அதிமுக திணறி வந்தது.

இந்நிலையில், நேற்று மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியதுடன், கூட்டணியை உடனே இறுதி செய்தாக வேண்டும் என திட்டமிட்டு, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் திட்டமிட்டார்.
அதன்படி மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட்டு, கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்கின்றனர்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு இன்று மாலையுடன் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடித்து, அதனை இறுதி செய்யும் வேலையில் அதிமுக தரப்பு இறங்கியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், மார்ச் 22ஆம் தேதி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி, களத்தில் இறங்கிச் செயல்படுவது பற்றி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி, மா.செக்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிகிறது.
-
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக்












Click it and Unblock the Notifications