பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு 'தானசெட்டில்மென்ட்' ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி
சென்னை: தமது பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு தானசெட்டில்மென்ட் பத்திர முறையை கேடயமாக பயன்படுத்தினார் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி என திடுக்கிட வைக்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சைகளுக்கும் நில மோசடிப் புகார்களுக்கும் உள்ளானவர் கே.சி.வீரமணி. இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திடம் குட்டும் வாங்கியவர்தான் கே.சி.வீரமணி.
தற்போது வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.சி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தானசெட்டில்மென்ட் மூலம் மோசடி
கே.சி.வீரமணி, பத்திரவுப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். அதனால் பத்திரப் பதிவு துறையில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறதோ அத்தனை ஓட்டைகளையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்கின்றனர் அவர் மீது குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கத்தினர். உதாரணமாக, மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் கே.சி.வீரமணி. அதனை மறுநாளே தமக்கு தானசெட்டில்மென்ட் கொடுத்ததாக மாற்றியும் இருக்கிறார். அம்மா பெயரில் முதல் நாள் ஒரு நிலம் வாங்குகிறார். மறுநாள் தான செட்டில்மென்ட் முறையில் தமக்கு மாற்றி இருக்கிறார்.

வழிகாட்டி மதிப்பில் மோசடி
மேலும் ஹில்ஸ் ஏலகிரி என்ற பெயரில் ஏகப்பட்ட நிலம் வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரத்த சொந்தங்களின் பெயரால் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் தமக்கு தானசெட்டில்மென்ட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம் வீரமணி. இப்படி தானசெட்டில்மென்ட் முறையை சாதகமாக்கி மோசடி செய்தல், வழிகாட்டி மதிப்பைவிட குறைவான தொகைக்கு நிலத்தை பதிவு செய்தல் என தமது மொசடிகளை அரங்கேற்றி இருக்கிறாராம் கே.சி.வீரமணி.

10 ஆண்டுகளில் ரூ76.65 கோடி சொத்து
2011-ம் ஆண்டு கே.சி.வீரமணி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ7.48 கோடி; இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ76.65 கோடியாக அதிவிஸ்வரூபமெடுத்திருக்கிறது. இவை எல்லாம் வெளியே தெரிந்த சொத்துகள்.. இன்னமும் எத்தனை எத்தனை பினாமிகள் பெயரில் எத்தனை நூறு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கு குவித்துள்ளாரோ கே.சி.வீரமணி என்கின்றன லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.

சொத்து விவரங்கள்
மேலும் ஹோம் டிசைனர் அண்ட் ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடிக்கு அசையா சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் ஓசூர் சிப்காட்டில் ஆகப் பெரும் மோசடி செய்து 99 ஆண்டு குத்தகைக்கு அரசு நிலத்தை வாங்கியிருக்கிறது. வி.பி.ஆர்.ஹில் ப்ராப்பர்ட்டீஸ் பெயரில் ரூ.7 கோடி; ஹோட்டல் ஹில்ஸ் திருப்பத்தூர் நிறுவனம் பெயரில் ரூ.6 கோடி; அகல்யா, பத்மாசினி பெயரில் ரூ.3.2 கோடி வாங்கப்பட்டுள்ளன என்கிற பட்டியலும் நீள்கிறது. இன்னும் தோண்ட தோண்ட எத்தனை பூதங்கள் வெளிவரப் போகிறதோ?
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications