என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! திடீர் தில்! வருமான வரித்துறைக்கு எதிராக வரிந்துகட்டும் விஜயபாஸ்கர்!
சென்னை: பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற கதையாக இதுவரை பொறுமை காத்து வந்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக பொங்கி எழுந்திருக்கிறார்.
நீயா? நானா? என ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற அளவுக்கு அவருக்கு வந்த திடீர் துணிச்சலால் வருமான வரித்துறையை நீதிமன்றம் வரை இழுத்து விட்டுள்ளார்.
விஜயபாஸ்கரை பொறுத்தவரை பல பேட்டிகளில் தனக்கு மடியில் கணமில்லாததால் வழியில் பயமில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயபாஸ்கர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் நாள் தவறாமல் செய்திகளில் இடம்பிடித்து வந்தவர் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதுவும் குறிப்பாக கொரோனா காலக் கட்டத்தில் விஜயபாஸ்கர் தினமும் மாலை 6 மணிக்கு அளிக்கும் பேட்டிக்காக ஒட்டுமொத்த தமிழக மக்களும் தொலைக்காட்சி முன் காத்திருந்தார்கள். இப்படி ஒரு காலத்தில் ஆஹா ஓஹோவென கொடிகட்டி பறந்த விஜயபாஸ்கர் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார்.

நீதிமன்றத்தில் மனு
பொதுவெளிகளில் பேசுவது, பேட்டிகள் கொடுப்பது, அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவது என எதிலுமே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைகாட்டாமல் இருந்து வருகிறார். தான் உண்டு தன் மாவட்ட கட்சிப் பணி உண்டு என்று இருந்து வரும் இவர், இப்போது வருமான வரித்துறைக்கு எதிராக கம்பு சுற்ற ஆரம்பித்துள்ளார். தனது தொகுதி மேம்பாட்டு நிதி வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கியிருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொறுத்தது போதும்
வருமான வரித்துறையினர் இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புடைய விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற படி ஏறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தான் இவர் இவ்வளவு துணிச்சலாக வருமான வரித்துறையை நீதிமன்றத்துக்கு இழுத்து விட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி பயணம்
அண்மையில் விஜயபாஸ்கர் டெல்லி சென்று திரும்பிய நிலையில் நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கெஞ்சியும் வேலை நடக்காததால் இனி மிஞ்சி பார்ப்பது என விஜயபாஸ்கர் முடிவெடுத்துவிட்டாரோ என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications