அதிமுகவின் ஜெயக்குமார்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் திடீர் சந்திப்பு.. ஏன் தெரியுமா?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாபெரும் கூட்டணியை அமைக்க தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் 4 ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர்.
விரைவில் ‛இந்தியா’ கூட்டணியில் மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு செய்யப்பட உள்ளது. தேசிய அரசியல் களம் இப்படி இருக்கும் சூழலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்கள் வரும் நாட்களில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணனும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரும் இன்று சென்னையில் திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு என்பது சென்னை அண்ணா சாலையில் நடந்துள்ளது.
அதாவது பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் இன்று மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார் மாலை அணிவித்து பெரியாரின் போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
இருவரும் ஒரே நேரத்தில் அங்கு வந்த நிலையில் பரஸ்பரம் கைக்குலுக்கி நலம்விசாரித்து கொண்டனர். பொதுவாக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கூட பொதுவெளியில் சந்திக்கும்போது பரஸ்பரம் நலம்விசாரிக்கும் பண்பு பல அரசியல் தலைவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தான் இந்த சந்திப்பு என்பது திடீரென்று நடந்துள்ளதும், நாகரீகம் கருதி இருவரும் பேசிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications