’கட்டபஞ்சாயத்து ராஜா' ஓபிஎஸ் பின்னணியில் திமுக! எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்! விடாத ஜெயக்குமார்
சென்னை : அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்-ஐ துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மான்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தொழிற்சங்க அமைப்பான அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

ஜெயக்குமார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,"போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை. இந்த அரசு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை ஆனால் அந்த நிலைக்கு தள்ள வேண்டாம்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது. அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்ற பேச்சு. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு அதில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை

சபாநாயகர் அப்பாவு
நாங்கள் ஓபிஎஸ் போல பந்திக்கு முந்திக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் உடன் 80%தொண்டர்கள் இல்லை வெறும் 80 தொண்டர்கள் தான் உள்ளனர் என விமர்சனம் செய்தார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். எனவே அதிமுக சார்பில் ops யை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்

திமுக
அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மான்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார். அதிமுக ஆட்சியின் போது சிறப்பாக செயல்பட்டு வந்த காவல்துறை இன்று திமுகவின் ஏவல்துறையாக மட்டுமே உள்ளது. திமுக ஓ.பன்னீர்செல்வத்தை முடுக்கிவிட்டுள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் திமுக என்ன சொல்கிறதோ அதனைச் செய்வார்." என்றார்.












Click it and Unblock the Notifications