5 அணிகள் இருக்கு.. ஐபிஎல் தொடரே நடத்தலாம்.. அதிமுகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அதிமுகவில் இபிஎஸ் அணி, ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என மொத்தம் 5 அணிகள் இருப்பதாகவும் அதிமுக அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியே நடத்தலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
திமுக சார்பில் 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஐபிஎல் போட்டிகள் இப்போது நடக்குது. கிட்டதட்ட 10 அணிகள் விளையாடுறாங்க..அதிமுகவிற்கு தனியாக ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியே நடத்தலாம்.

ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி, தீபா அணி என 5 அணிகள் இருக்கு. தீபா அணிக்குள் இரண்டு அணிகள் இருக்கு...டிரைவர் அணி, ஹஸ்பண்ட் அணி என இருக்கு.. சமீபத்தில் நான் பிரதமரை சந்தித்து விட்டு வந்தேன். மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு வந்தேன். பஞ்சாயத்துக்காக நான் செல்லவில்லை.
தைரியமாக அவரிடம் உட்கார்ந்து பேசி நீட் விலக்கு கொடுங்க என அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். மக்களுடைய கோரிக்கைக்காகத்தான் நான் பார்த்து விட்டு வந்தேன். ஆனால், இங்கே இருந்து இரண்டு மூன்று கோஷ்டி அப்பப்போ போகிறது. டெல்லியில் தான் பஞ்சாயத்து தலைவர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு போகும் முன் பேட்டி கொடுத்தார்.
அப்போது எங்க பாஸ் டெல்லியில் தான் இருக்கிறது. இங்கே இருக்கிறவர்களுக்கு தகுதியே இல்லை என்றார். அதேபோல் இங்கே இருக்கிற பாஜக தலைவரும் அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று சொன்னார். மருத்துவமனைக்கு சென்றால் டாக்டர்கள் மருந்து எழுதி தருவார்கள். அந்த மருந்து சீட்டில் ஆமு, ஆபி என எழுதி தருவார்கள்.
அதாவது, ஆகாரத்திற்கு முன் ஆகாரத்திற்கு பின் என குறிப்பிட்டு இப்படி கொடுப்பார்கள். அதேபோலத்தான் இப்போது அதிமுக காரர்களுக்கும் பாஜக காரர்களுக்கும் ஒன்று இருக்கு. அமு, அபி அதாவது அமித்ஷாவிற்கு முன் அமித்ஷாவிற்கு பின் என செயல்படுகிறார்கள். அமித்ஷாவை பார்த்து விட்டு வந்து இரண்டு பேரும் சமாதானம் ஆகிவிட்டார்கள்.
எல்லாவற்றையும் இலவசமாக கொடுப்பதாக நம்மை விமர்சிக்கும் பாஜக, கர்நாடகவில் தேர்தல் வாக்குறுதியாக கட்டணம் இல்லா பஸ் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இது நமது திட்டம்.அதேபோல உரிமைத்தொகை..தேர்தல் அறிக்கையை கூட பாஜக காப்பி அடித்துதான் செய்யும்.
எம்.ஜி.ஆர் எப்போதும் சொல்வார். ரத்தத்தின் ரத்தங்களே என்று..அதிமுகவில் தற்போது பாதி ரத்தம் இல்லை. இருக்கிற ரத்தத்தையும் பாஜக அட்டை மாதிரி ஒட்டி உறிந்து கொண்டு இருக்கிறது. திராவிடம் என்றால் அனைவரும் சமம். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிடம். ஏழை பணக்காரன் இருக்கக் கூடாது.

மேல்ஜாதி, கீழ் ஜாதி இருக்கக்க்கூடாது. ஆண், பெண் சம உரிமை வேண்டும் என்பதற்காக உருவானதுதான் திராவிடம். அது காலாவதியாகிவிட்டதாக சொல்கிறார் ஆளுநர். உங்கள் சனாதனத்தை அழிக்க வந்ததுதான் எங்கள் திராவிடம். தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி' இவ்வாறு அவர் கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications