காவல்துறை கட்டுப்பாட்டில் சென்னை அதிமுக அலுவலகம்.. குவிந்த போலீஸ்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Recommended Video
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. ஆனால் விடுதலையான பிறகு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார் சசிகலா.
இன்று காலை அவர் பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அதிமுக கொடி
அவர் தனது வாகனத்தில் அதிமுக கொடியை கட்டியுள்ளார். ஏற்கனவே அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும் அதிமுக கொடியை கட்டியிருந்தார். எனவே, தான்தான், அதிமுக பொதுச்செயலாளர் இன்று அவர் கூறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிபியிடம் மனு
சென்னை வந்ததும் அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தால் என்ன செய்வது என்று அதிமுக தலைமை யோசிக்கிறது. இந்த நிலையில்தான் டிஜிபியிடம் மூத்த அமைச்சர்கள் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக மனு அளித்தனர்.

சட்டம் ஒழுங்கு
சசிகலா வருகை தரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அவர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உள்ளன. அதிமுக அலுவலகம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்பதை போல அங்கு காட்சிகள் உள்ளன.












Click it and Unblock the Notifications