ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!
Recommended Video
சென்னை: இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் ஆட்சி நம்மிடம்தான் இருக்கும். அதில் மாற்றமே இல்லை என்ற அதீத நம்பிக்கையில் உள்ளனர் அதிமுகவினர்.
இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் உள்ளதாம்.
இந்நிலையில் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சை நச்சரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

பிறகு பார்க்கலாம்
நெருக்கடி நிலையில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதால் யாரிடமாவது அமைச்சர் பதவியை பறித்து அது ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடப் போகிறது என யோசனை செய்கிறார்களாம்.

புதியவர்களை சேர்க்கலாமே
பதவியை பறித்தால் தானே சிக்கல், புதிதாக 2 பேரை அமைச்சரவையில் சேர்த்தால் என்ன என ஆலோசிக்கப்படுகிறதாம். அந்தவகையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக உள்ள பரமசிவத்திற்கு அமைச்சர் பதவிக்கான ஜாக்பாட் அடித்தாலும் அடிக்குமாம்.

டாக்டர் பரமசிவம்
கோஷ்டிகளில் சிக்காதது, மருத்துவர், இளம் வயது உள்ளிட்ட விவகாரங்கள் பரமசிவத்துக்கு ப்ளஸ் ஆக உள்ளதாம். தம்பிதுரை இவருக்காக பலத்த
பரிந்துரை செய்துள்ளாராம்.

முடிந்ததும் பார்க்கலாம்
ஆனால் தேர்தல் முடிவு வராமல் எதைப்பற்றியும் யோசிக்கும் முடிவில் இ.பி.எஸ். இல்லையாம். ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் அதிமுகவும் உள்ளதால் இரு கட்சிகளிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

உற்சாகம்
அதிமுக ஆரம்பத்திலிருந்தே நாடாளுமன்றத் தேர்தல் முடிவை விட இடைத் தேர்தல் முடிவைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், இது சாதகமாக இருந்தால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால். இந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிமுகவினர் உற்சாகமாக இருப்பது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications