அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர்! திடீரென டோனை மாற்றிய எஸ்.பி.வேலுமணி! ட்விஸ்ட்டான யூடர்ன்!
சென்னை: அதிமுக எங்களின் உயிர் மூச்சு, அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் பல்டியாக இதை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், ஐயூஎம்எல், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.

தவெக பதவியேற்பதற்கு முன்பே அதிமுக இரண்டாக பிரிந்தது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அது போல் தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியும், இந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு என அறிவித்ததுடன் தவெகவுக்கு ஆதரவையும் அளித்தனர்.
இதனால் தவெக அமைச்சரவையில் அதிமுகவுக்கு 5 இடங்கள் வரை கிடைக்கும் என தகவல்கள் கிடைத்தன. அதே நேரம் அதிமுக அமைச்சரவையில் வந்தால், தவெகவுக்கு ஆதரவு கொடுத்த விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
ஆனால் நேற்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. அப்போது காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றனர். அது போல் இன்று நடந்த பதவியேற்பிலும் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
இதனால் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கல் ஏமாற்றமடைந்தனர். அது போல் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ அழைப்பும் அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் வேலுமணி சி.வி.சண்முகம் தரப்பினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி கூறுகையில், "இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தேவையில்லை என்றுதான் நினைத்தோம்.
இருந்தாலும் கூட ஒரு சில பத்திரிகைகள் தொடர்ந்து நாங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க போவதாக பேசி வருகிறார்கள், அதில் நாங்கள் ஏமாற்றமடைந்ததாகவும் சொல்கிறார்கள். நானோ சிவி.சண்முகமோ அமைச்சர்களாக உள்ளே போவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.
திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான் மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அதே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.
அதிமுகவில் பிளவு கிடையாது. எங்களுக்குள் இருக்கும் ஒரு கருத்து வேறுபாடுதான். இப்போதும் சொல்கிறேன், அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர், அவரிடம்தான் தோல்வி குறித்த ஆய்வறிக்கையை வழங்குவோம். அதிமுகதான் எங்கள் உயிர் மூச்சு என வேலுமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications