ADMK: உண்ட வீட்டுக்கு இரண்டகம்! அம்மாலாம் சும்மாதானே? கூச்சமே இல்லையா? ஓபிஎஸ்ஸை அட்டாக் செய்த அதிமுக!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்ஸை அதிமுகவினர் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: கூச்சமே இல்லையா O Panneerselvam ...??!!
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.

ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட
கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும்,
வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?!
"உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்! இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற...
உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
(பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக் கொள்ளட்டும்!)
இவ்வாறு ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications