சட்டசபையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய அதிமுகவினர்! சபாநாயகர் கொடுத்த ரியாக்சன்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை பேச்சை நிறுத்தி அமருமாறு சபாநாயகர் கூறினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கு சபாநாயகர் அப்பாவு என்ன அதிமுக பக்கம் இருந்து சத்தம் வருகிறது என்று கூறியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110-ன் கீழ் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை தொடர்ந்து சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அப்போது தமிழக சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர். வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர்.
மானிய கோரிக்கை விவாதத்தின் போது வானதி சீனிவாசனுக்கு 10 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 10 நிமிடம் பேசிய நிலையில் அவரை பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். அப்போது அதிமுக எம் எல் ஏக்கள் சபாநாயகரிடம், வானதி சீனிவாசனை பேச அனுமதிக்குமாறு கூறினர். இதை கேட்டதும் சபாநாயகர் அப்பாவு, " என்ன அதிமுக பக்கம் இருந்து சத்தம் வருகிறதே" என்று கூறினார்.
அப்போது சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே வானதி சீனிவாசன் எழுந்து பேசினார். அவர் கூறுகையில், "அமைச்சர்களுக்காக பேரவைத் தலைவராக இருக்கக் கூடிய சபாநாயகர் பேசும் போது, எனக்காக அதிமுகவினர் பேசக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications