பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறிபோகிறது.. எடப்பாடி அரசுக்கு ஆபத்தா?
சென்னை: ஒசூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோயுள்ளதால், தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக 115 தொகுதிகளை வென்றது. இதையடுத்து 88 தொகுதிகளை வென்ற திமுக 2வது பெரிய கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வென்றனர்.

தகுதி நீக்கம்
இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ், மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் மரணமடைந்தனர். இதனால், காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தது.

அதிமுக பலம்
இதன் காரணமாக, மொத்த சட்டசபையின் பலம் 214 என்ற அளவுக்கு சரிவடைந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் இருந்தால், அரசு காப்பாற்றப்படும். அதாவது 108 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு தேவை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை வைத்து பார்த்தால் 102 எம்எல்ஏக்கள் பலம்தான் அதிமுக அரசுக்கு உள்ளதாக கூறப்பட்டது.

பெரும்பான்மைக்கு சிக்கல்
பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவியை இழந்துள்ள நிலையில், சட்டசபை பலம் 213ஆக குறைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேல்.. அதாவது 107 எம்எல்ஏக்கள் பலம் தேவை. பாலகிருஷ்ண ரெட்டியும் பதவி பறிகொடுத்துள்ள நிலையில், அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் பலம் 101 என்ற அளவில் சரிந்துள்ளது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் ஒருவேளை, அரசுக்கு ஆதரவு அளித்தாலும் கூட, பெரும்பான்மை பலம் பெற முடியாது.

நம்பிக்கையில்லா தீர்மானம்?
இப்படியான சூழலில், எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா, அல்லது இடைத் தேர்தலுக்காக காத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதேநேரம், அரசு தரப்பில் விசாரித்தபோது, தங்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா!












Click it and Unblock the Notifications