சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா சின்னம்- உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது.

 AIADMK moves Supreme Court against Karunanidhi Pen Monument

சென்னை மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் கட்டப்படும். அதனுடன் இணைந்ததாக சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும். இதற்காக ரூ81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாநிதி பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, எதிர்ப்பை மீறி பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்றார். தொடர்ந்து இதே கருத்தை சீமான் கூறி வருகிறார். அண்மையில் மத்திய அரசு 15 நிபந்தனைகள் விதித்து சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே மீனவர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+