அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக இரவு 8.45 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை சம்பந்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவி சண்முகத்திற்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவி சண்முகம் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதை சிவி சண்முகம் மறுத்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாக கூறினார்.
இந்த நிலையில், தான் நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவி சண்முகம் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications