நேற்று விஜயபாஸ்கர்.. இன்று தம்பிதுரை.. நாளை ஓ.பி.எஸ்.. கலக்கத்தில் அதிமுக
Recommended Video

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை விசாரணைக்காக ஆஜரானார். நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப் பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதாவின் பணியாளர்கள், சசிகலா தரப்பினர், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையை நடத்தியது.

சமீபத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு, நேற்று மீண்டும் விசாரணை ஆரம்பமானது.
ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கமளித்தார்.
8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதற்காக, இன்று காலை 10.20 மணி அளவில், சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தம்பிதுரை விசாரணைக்கு ஆஜரானார்.
சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்லும் திட்டம் இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று விசாரணையின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த தகவல்களை வைத்தும் தம்பிதுரையிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications