கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்
சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் எம்ஜிஆர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை- பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூர் சந்திப்பு வரையிலான எல் அன்ட் டி பைபாஸ் 4 வழிச் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும்.
சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகர பகுதிகளில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சென்னை வெள்ள தடுப்பு பணிகள் முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்றப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் சார்ந்த கடற்கரை பகுதிகள் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடல் சார் விளையாட்டு மையம் ஏற்படுத்தி படகு சவாரி, அலைச் சறுக்கு, ஸ்கூபா டைவிங், வாட்டர் போலோ, ஃப்ரீ டைவிங் போன்ற விளையாட்டுகள் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனங்களின் பங்களிப்புடன் வேர்ல்டு கிளாஸ் வாட்டர் தீம் பார்க் அமைக்கப்படும்.
மெரினாவில் மீன் உணவகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத் தரத்தில் கடல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.
வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை அளிக்கப்படும். மகளிர் நலன் காக்க குல விளக்கு திட்டம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ 2000 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு 297 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
செவ்வாழை கிலோ ரூ.60.. பொள்ளாச்சியில் சர்ப்ரைஸ்.. கிடுகிடுவென ஏறிய விலை! கோவை விவசாயிகளுக்கு ஜாக்பாட் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications