திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் பேசாம இருந்திருந்தா இது நடந்திருக்குமா??
திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சால் தொகுதியில் தோல்வி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஏதோ கொஞ்சமாச்சும் கிடைச்சிருக்கும். ஆனால் தனது தேவையில்லாத உளறல் பேச்சால் அதையும் கெடுத்து விட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் பக்கத்தில் அதிமுக, பாமகவினர் இப்படித்தான் புலம்பிக் கொண்டுள்ளனராம்.
திண்டுக்கல் என்ற பெயர் அதிமுகவினருக்கு மிக முக்கியமான ஒன்று. அதிமுகவின் புனிதத் தலம் போலவும் கூட. காரணம், அதிமுக பிறந்ததும் கிடைத்த முதல் வெற்றி திண்டுக்கல்தான். அப்படிப்பட்ட திண்டுக்கல்லை, எப்போதுமே கெளரவப் பிரச்சினையாக கருதுவது அதிமுகவின் வழக்கம்.
ஆனால் இந்த முறை அதிமுக திண்டுக்கல்லில் 3 விதமாக அவமானப்பட்டுள்ளது. அதுதான் அடிமட்டத் தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம்.

கூட்டணிக்கு தொகுதி
முதலில் அதிமுக திண்டுக்கல்லில் போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சிக்கு இதைக் கொடுத்து விட்டது. இதை அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. என்ன இப்படி பண்ணிட்டாங்களே என்று வேதனைக்குள்ளாகினர் அதிமுகவினர். மாயத்தேவர் வென்று கொடுத்த தொகுதியை இப்படி கூட்டணிக்கு ஒதுக்கிட்டாங்களே என்று அதிர்ச்சி அடைந்தனர்.

பாமகவுக்குப் போய் ஒதுக்கீடு
அடுத்த அதிர்ச்சி, தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது. இதை அதிமுகவினர் மட்டுமல்ல, பாமகவினருமே எதிர்பார்க்கவில்லை. வேட்பாளர் கூட கிடைக்கவில்லை. வேட்பாளர் கிடைத்தால் அவருக்கு நல்ல சட்டை துணி கூட கிடையாது. இப்படி அடுத்த குழப்பம் வந்தது.

உளறல் சீனிவாசன்
அடுத்து வந்த சோதனை அதை விட மோசமானது. அதாவது உள்ளூர் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சுக்கள் வந்த ஓட்டுக்களையும் கூட திசை திருப்பி விட்டது. மாம்பழம் என்று சொல்வதற்கு ஆப்பிள் என்று அவர் சொல்லி அதை காமெடியாக்கி விட்டார். இதெல்லாம் பாமகவுக்கு பாதகமாக வந்து சேர்ந்தது.

தொண்டர்கள் அப்செட்
அதிமுகவுக்குத் தொகுதி கிடைக்கவில்லை, பாமகவுக்குப் போனதால் கவலை, திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு என எல்லாம் சேர்ந்து அதிமுகவினரை சோர்வடைய செய்து விட்டது. யாருமே மனசார வேலை பார்க்கவில்லை. இதன் பலனை தற்போது திமுக அறுவடை செய்துள்ளது.

வாக்கு வித்தியாசம்
ஆம், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த வேட்பாளர் திண்டுக்கல்லில் போட்டியிட்ட வேலுச்சாமிதான். கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் வேலுச்சாமி. இது இந்திய அளவில் 4வது அதிக வாக்கு வித்தியாசமாம்.
இதற்கு மேலும் திண்டுக்கல்லை அதிமுக கோட்டை என்று யாருமே சொல்ல முடியாது என்று கூறும் அளவுக்கு திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளூர் அதிமுகவினரும் சேர்ந்து கட்சியை காலி செய்து விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications