பொதுக்குழு முடிந்த மறுநாளே.. வேகம் காட்டிய அதிமுக! 15 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் வரும் 15 ஆம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளாவில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை,
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications