பட்ஜெட்டை வாசித்த பிடிஆர்.. கத்தி கூச்சல் போட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. கண்டித்த சபாநாயகர்.. வெளிநடப்பு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்த போது எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை: சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை வாசித்த போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டார். பட்ஜெட் உரையைத் தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று கூறிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை மாற்றப்படாத நிலையில், இதை காரணமாக வைத்து பட்ஜெட் உரையை அதிமுகவினர் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்த போது அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு அனைவரும் அமைதியாக இருக்கையில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் இன்றைய தினம் நிதிநிலை அறிக்கையை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதனையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications