பில்கிஸ் பானு வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். கோத்ரா ரயில் சம்பவத்தின் போது ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

அத்துடன் அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேரையும் கொடூரமாக கொலை செய்தது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது.
விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடூர குற்றத்தை அரங்கேற்றிய 11 பேரையும் விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மகுவா மொய்த்ரா உள்பட ஏராளமானோர் பொதுநல மனுக்களையும் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.
-
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications