பாமக ரூட்டில் அதிமுக.. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் எடப்பாடி.. ஜுலை 23ல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நேற்று 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளும் திமுகவை கண்டித்தும் வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது நேற்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த முறை நாம் மின்கட்டணம் செலுத்தும்போது புதிய மின்கட்டணத்தின் அடிப்படையில் பணம் வழங்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்பட பல எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு லோக்சபா மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியை பரிசளித்த தமிழக மக்களுக்கு திமுக அரசின் பரிசு இதுதான் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் திமுக அரசு பதவயேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது மறையா மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
அதேபோல் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23.7.2023 - செவ்வாய்க்கிழமை காலை 10 .30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பானது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. முன்னதாக தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமக சார்பில் ஜுலை 19 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அதிமுகவும் போராட்டம் அறிவித்துள்ளது.
-
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை












Click it and Unblock the Notifications