பாமக ரூட்டில் அதிமுக.. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் எடப்பாடி.. ஜுலை 23ல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நேற்று 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளும் திமுகவை கண்டித்தும் வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது நேற்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த முறை நாம் மின்கட்டணம் செலுத்தும்போது புதிய மின்கட்டணத்தின் அடிப்படையில் பணம் வழங்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தான் மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்பட பல எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு லோக்சபா மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியை பரிசளித்த தமிழக மக்களுக்கு திமுக அரசின் பரிசு இதுதான் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் திமுக அரசு பதவயேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது மறையா மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
அதேபோல் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23.7.2023 - செவ்வாய்க்கிழமை காலை 10 .30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பானது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. முன்னதாக தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாமக சார்பில் ஜுலை 19 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அதிமுகவும் போராட்டம் அறிவித்துள்ளது.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications