அனைத்து இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும்.. அடித்துக் கூறும் அமைச்சர் ஜெயக்குமார்
பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெல்லும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் வரவேற்புரையாற்றினார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உடுமலைபேட்டை ராதாகிருஷ்ணன், ஜேசிடி பிரபாகரன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: பெரம்பூர் தொகுதி மட்டுமல்ல நடைபெற உள்ள அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். பெரம்பூர் தொகுதியில் ஸ்டாலின் 9 கட்சிகளோடு கூட்டணி வைத்தாலும் சரி, தினகரனோடு கள்ள உறவு வைத்தாலும் சரி, நாம் ஒன்றுப்பட்டு உழைத்தால் மிகப்பெரிய வெற்றியை வெற்றி பெற முடியும்.
அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு, ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலர் கணக்கு போட்டார்கள், ஆனால் அந்த கணக்கையெல்லாம் முறியடித்து ஆட்சி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது.
திமுக , அமமுக கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக மட்டும் தான் கொள்கைகளை கடைபிடித்து கட்சியை நடத்தி கொண்டு இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறியதாவது, நடைபெற இருக்கின்ற இடைத் தேர்தலுக்காக தேர்தல் பணிகளை நாங்கள் இப்போது இருந்தே துவக்கி இருக்கிறோம்.
30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெறும்.
பத்திரிக்கையாளரை தாக்கியது திமுக நிர்வாகி அல்ல என்று ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு, திமுக இப்பொழுது அல்ல, கருணாநிதி காலத்தில் இருந்தே பொய் மட்டுமே கூறி வருகிறது என்று கூறினார்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications