முடங்கிய ஏர்டெல்.. கால் & நெட் எதுவும் கிடைக்கல.. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகள் நாடு முழுக்க முடங்கின. இதற்கிடையே இன்று மீண்டும் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியுள்ளது. பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பல ஆயிரம் ஏர்டெல் யூசர்கள் கால், இணையம் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் திணறினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் பல்வேறு செல்போன் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது நாட்டில் ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் என 4 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இப்போது நாட்டில் பெரும்பாலான மக்கள் மொபைல் மூலமாகவே இணையச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் மொபைல் நெட்வொர்க்குகள் முக்கியமானதாக இருக்கிறது. அதில் சிறு பிழை ஏற்பட்டாலும் கூட பேமெண்ட் தொடங்கி எல்லாமே முடங்கிவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நெட்வொர்க் முடங்கிப் போனது. சில மணி நேரம் வரை நெட்வொர்க் பாதிப்பு இருந்தது.
இதற்கிடையே இப்போது மீண்டும் ஏர்டெல் நிறுவனத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. டவுன் டிடெக்டர் தளத்தின்படி, ஏர்டெல் சேவை முடக்கம் நண்பகல் 12:11 மணியளவில் உச்சத்திற்குச் சென்றது. சுமார் 7000க்கும் அதிகமானோர் ஏர்டெல் சேவை முடங்கியதாகப் புகார்கள் பதிவாகின. பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை உட்பட முக்கிய நகர்களில் ஏர்டெல் சேவை முடங்கியுள்ளது.
ஏர்டெல் நெட்வொர்க்கில் சிக்கல் இருப்பதை ஏர்டெல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக 'ஏர்டெல் கேர்ஸ்' வெளியிட்ட அறிக்கையில், "தற்காலிக இணைப்புச் சிக்கலால் இது ஏற்பட்டிருக்கலாம். ஒரு மணி நேரத்திற்குள் இது சரிசெய்யப்படும்.. சிரமத்திற்கு வருந்துகிறோம். நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் தற்காலிகமானது ஒரு மணி நேரத்தில் செல்போனை ரீஸ்டார்ட் செய்தால் நெட்வொர்க் கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பெங்களூரில் ஏர்டெல் முடங்கிவிட்டது. யாராலும் ஏர்டெல் சேவையை பயன்படுத்த முடியவில்லை" என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "ஏர்டெல் போஸ்ட்பெய்டு கடந்த 6 மணி நேரமாக முடங்கியுள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ முடியவில்லை" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications