“கில்லி” பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. கொந்தளித்த விஜய் ஃபேன்ஸ்.. எல்லை மீறிய எபினேஷுக்கு காப்பு!
சென்னை: சென்னையில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த 'கில்லி' பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 20 வருடத்திற்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டில் வெளியான படம் என்றாலும் தற்போதும் ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரில் உற்சாகமாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 1 அன்று அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த 'தீனா' படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், உற்சாகமாக தீனா படம் பார்த்தனர்.
அப்போது, அஜித் ரசிகர் ஒருவர் சென்னை காசி தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இதற்கிடையே கில்லி பட போஸ்டர் கிழிக்கப்பட்டது தொடர்பாக தியேட்டர் மேலாளர் ராம்ராஜ் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் எம்.ஜி.ஆர் நகர் போலீசார், விஜய் பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் எபினேஷை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications