தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்
சென்னை: தனது தாய் மோகினியின் இறுதிச் சடங்கிற்கு சிறப்பான வகையில் பாதுகாப்பு கொடுத்த காவல் துறையினரை கையெடுத்து கும்பிட்டு, நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.
நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி மணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அஜித் துபாயில் இருந்ததால் அவரது வருகைக்காக தாயின் இறுதி சடங்கு நேற்று நடைபெறவில்லை.

இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த அஜித், தாயின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் இன்றைய தினம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் மோகினியின் இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அஜித்தின் தந்தை பாலக்காட்டு பிராமணர் என்ற முறையில் மோகினிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. தன்னை 10 மாதம் சுமந்த தாயின் உடலை பெசன்ட் நகரில் கடைசியாக ஒரு முறை அஜித் சுமந்தார். அப்போது அவரது முகம் முழுக்க சோகமே காணப்பட்டது.
இதையடுத்து மின் மயானத்தில் மோகினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாய்க்கு தலை பிள்ளை என்பதால் அனில்குமார் இறுதி சடங்குகளை செய்திருப்பார் என தெரிகிறது.
மேலும் தனது தாயாரின் இறுதி சடங்கிற்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு அந்த துக்கத்திலும் அஜித் சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
இது போல் கடந்த 2023 ஆம் ஆண்டும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் இறப்பின் போதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறப்பான பாதுகாப்பு கொடுத்து தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய எந்த ஒரு இடையூறும் இன்றி உதவினர். அப்போதும் அஜித்குமார், போலீஸாருக்கும் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications