தினமும் புது ரெக்கார்ட்.. மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசம்..இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்
சென்னை: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,203,016 பேர் குணமாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 277 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 11,733,594 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160477 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மிக மோசமான நிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 25,33,026 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,47,495 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53589 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,07,453 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,78,743 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4518 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,73,657 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,45,594 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12449 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,69,804 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12618 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,94,536 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,84,727 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7193 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications