திமுகவுடன் கூட்டணியில் பிரச்சனையா? திருமாவளவன் விளக்கம்!
திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்று கடந்த சில நாட்களாக விவாதம் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்றும் கூட விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சந்திப்பிற்கான காரணத்தையும் அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.
அதில், திமுக - விசிக உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். திமுகவுடன் உறவு வலிமையாக உள்ளது.
கஜா புயல் சேதம், நிவாரண நிதி, லோக் சபா தேர்தல், தமிழக சட்டமன்ற இடைதேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்தோம். எங்கள் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது. சிலர் வதந்திகளை பரப்பி சந்தோசம் அடைய பார்க்கிறார்கள்.
இப்போது கூட துரைமுருகனை பார்த்து சிரித்து பேசிவிட்டுத்தான் வந்தேன். கூட்டணி குறித்து பிறகுதான் பேசவேண்டும். இப்போது அதை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. இதற்கும் மேல் நான் விளக்கமாக சொல்ல முடியாது.
கஜா புயலுக்கு தமிழக அரசு சரியாக நிவாரணம் வழங்கவில்லை. மீட்பு பணிகளை தமிழக அரசு மிகவும் தாமதமாக செய்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முடிவெடுத்து இருக்கிறது. இது காவிரி இறுதி தீர்ப்பிற்கு எதிரானது. கர்நாடக அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications