தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்.. அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு துறை செயலாளர்கள், காவல் அதிகாரிகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிட மாற்றங்களை அவ்வப்போது தமிழக அரசு மேற்கொள்ளும். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வணிக மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளவது:- * கே.செந்தில் நாதன், சார் பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலை) தி.நகர், இவர் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தஞ்சைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஜி.அறிவழகன் - மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செய்யார், - இவர் மாவட்ட பதிவாளர் ( நிர்வாகம்) செங்கல்பட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ஏ.கலைசெல்வி 1 எண் இணை சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலை) வட சென்னை - மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பட்டுக்கோட்டை
* சுரேஷ் பாபு, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசி , இவர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பட்டுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ரத்தினவேல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ராமநாதபுரம், இவர் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை உள்பட 36 மாவட்ட பதிவாளர்களை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications