சிறுபான்மையினர், தலித் வாக்குகளை சிதறடிக்காத தொகுதி மறுசீரமைப்பு- திருமாவளவன் 'நச்' பாயிண்ட்
சென்னை: மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோல் இல்லாமல் அவர்களது வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் எம்பி கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையிலே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வை மேற்கொண்டு இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்த கூட்டம் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கிறது.

50 மாநிலங்கள் கொண்ட ஒரு தேசம் அமெரிக்கா நூறாண்டுகளாக ஒரே எண்ணிக்கையை தான் அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் இதே பிரதிநிதித்துவ சனநாயகம் தான் நடைமுறையில் இருக்கிறது.
எனவே, நமது முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம். இதே எண்ணிக்கையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. 39 இடங்கள் நமக்கு இருக்கின்றன எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். அதையே தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எண்ணிக்கையை உயர்த்துவதென்றால் தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் விகிதம் மாறாமல் உயர்த்த வேண்டும்.
கடந்த முறை மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இசுலாமியர்கள் கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. அதுபோல் இல்லாமல் அவர்களது வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டாம், தற்போது நடைமுறையில் உள்ளது போலவே தொடர வேண்டும்.
தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை குழு அது முதற்கட்டமாக தேவையானதாக கருதுகிறேன். அந்த கூட்டு நடவடிக்கை குழுவையும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது ஆதரிக்கிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மறுபடியும் அடுப்பு தான் ஊதனுமா? இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! மத்திய அரசு எடுத்த முடிவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications