Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக ரேஷன் கடைகளில் மான்ய "ரசீது" வாங்கிட்டீங்களா? தமிழக அரசின் அடுத்த அதிரடி.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையில் புதிய மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 210 ரேஷன் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவி மூலம் ரேகை பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். இதற்கான விழா, தாடிக்கொம்பு ரேஷன் கடையில் நடைபெற்றது.

Ration Card Holders TN Government

அமைச்சர்: அப்போது அமைச்சர் பேசும்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது.. பொதுவிநியோகத் திட்டத்திற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற தனித்துறை தி.மு.க., ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கைரேகை பதிவினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது" என்றார் அமைச்சர்.

மானியம்: இதனிடையே,7 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவு துறை வெளியிடுகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன..

முறைகேடுகள்: எனவே, உணவு மானியத்திற்காக மட்டும், தமிழக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.. எனினும், அரிசி கார்டு வைத்திருக்கும் நிறையபேர், இலவச அரிசியை தவிர்த்துவிட்டு, ரேஷனில் உள்ள மற்ற பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அரிசியை விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.

அதனால்தான், கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு SMS அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மெசேஜ்களை அனுப்பினாலும், பலரும் கண்டுகொள்வதில்லை. அதனால் அடுத்த அதிரடியாக, ரேஷன் கடைகளுக்கு விரல் ரேகை பதிவு, பிரின்டர் ரசீதுடன் கூடிய புதிய விற்பனை கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அத்துடன் விழிரேகை சரிபார்ப்பு கருவியும் வழங்கப்படுகிறது...

மானிய தொகை: அதாவது, பொருட்களை விற்கும்போது வழங்கப்படும் ரசீதில், ரேஷன் கார்டு எண், நுகர்வோர் பெயர், பொருட்கள் விற்பனை அளவு, அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மொத்த தொகையில் கார்டுதாரர் வழங்க வேண்டியது, தமிழக அரசின் மானியம் எவ்வளவு என்ற விபரங்கள் அந்த ரசீதில் இடம் பெற்றிருக்கின்றன.

சில ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இப்படியொரு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது... இதனை பார்த்து, அரசுக்கு ஏற்படும் செலவை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ள முடியும்... அதேசமயம், ரேஷன் கடைகளில் தவறு நடந்தால், ரசீதில் உள்ள தொலைபேசி எண்களிலும் புகார் தரவும் முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+