தமிழக ரேஷன் கடைகளில் மான்ய "ரசீது" வாங்கிட்டீங்களா? தமிழக அரசின் அடுத்த அதிரடி.. செம
சென்னை: ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையில் புதிய மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 210 ரேஷன் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவி மூலம் ரேகை பதிவு செய்து பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். இதற்கான விழா, தாடிக்கொம்பு ரேஷன் கடையில் நடைபெற்றது.

அமைச்சர்: அப்போது அமைச்சர் பேசும்போது, "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது.. பொதுவிநியோகத் திட்டத்திற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற தனித்துறை தி.மு.க., ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கைரேகை பதிவினால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது" என்றார் அமைச்சர்.
மானியம்: இதனிடையே,7 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவு துறை வெளியிடுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன..
முறைகேடுகள்: எனவே, உணவு மானியத்திற்காக மட்டும், தமிழக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.. எனினும், அரிசி கார்டு வைத்திருக்கும் நிறையபேர், இலவச அரிசியை தவிர்த்துவிட்டு, ரேஷனில் உள்ள மற்ற பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அரிசியை விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.
அதனால்தான், கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு SMS அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மெசேஜ்களை அனுப்பினாலும், பலரும் கண்டுகொள்வதில்லை. அதனால் அடுத்த அதிரடியாக, ரேஷன் கடைகளுக்கு விரல் ரேகை பதிவு, பிரின்டர் ரசீதுடன் கூடிய புதிய விற்பனை கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அத்துடன் விழிரேகை சரிபார்ப்பு கருவியும் வழங்கப்படுகிறது...
மானிய தொகை: அதாவது, பொருட்களை விற்கும்போது வழங்கப்படும் ரசீதில், ரேஷன் கார்டு எண், நுகர்வோர் பெயர், பொருட்கள் விற்பனை அளவு, அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மொத்த தொகையில் கார்டுதாரர் வழங்க வேண்டியது, தமிழக அரசின் மானியம் எவ்வளவு என்ற விபரங்கள் அந்த ரசீதில் இடம் பெற்றிருக்கின்றன.
சில ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இப்படியொரு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது... இதனை பார்த்து, அரசுக்கு ஏற்படும் செலவை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ள முடியும்... அதேசமயம், ரேஷன் கடைகளில் தவறு நடந்தால், ரசீதில் உள்ள தொலைபேசி எண்களிலும் புகார் தரவும் முடியும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications