Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில்.. சென்னை மயிலாப்பூரில் திடீர் சத்தம்? என்னாது கரண்ட் கட்? அதிரடியில் மின்சார வாரியம்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூரில் நள்ளிரவு ஏற்பட்ட மின் துண்டிப்பை கண்டித்துபொதுமக்கள், ராயப்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை அதிகமாகவே இருக்கும்.. அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது.. கடந்த ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது.

Amazing Precuations by TANGEDCO and Did Chennai Mylapore protest in the Mid night against TN Electricity Board

கோடை காலம் தொடங்கியதையடுத்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மின் விசிறி மற்றும் குளிர்சாதன கருவிகளின் தேவையும் அதிகரித்துள்ளது.

கோடை காலம்: ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும் என்றே கூறப்பட்டது. அதற்கேற்றவாறு, மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது. அதிலும் கடந்த வாரம் 18ம் தேதி, ஒரே நாளில் மட்டும் 55 லட்சம் யூனிட் உயர்ந்து, 44.82 கோடி யூனிட்களாக அதிகரித்திருந்தது.

எனினும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டணம் வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை: எனினும் ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டு வருகிறது.. மின் சாதன கருவிகளை ஒரேநேரத்தில் அனைவரும் பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.. அந்தவகையில், நள்ளிரவு 12 மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் தெரு, கணேசபுரம், திருவீதி அம்மன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது... நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.

எனவே, ஆத்திரம் அடைந்த மயிலாப்பூர் பகுதி மக்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு உடனடியாக மின் விநியோகம் வழங்கும்படி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுவிட்டது..

அறிவுறுத்தல்: இதற்கு பிறகு, தகவல் அறிந்து ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மின் விநியோகம் வர ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்... இதனிடையே. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக்கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+